செய்திகள் (Tamil News)

மதுரையில் புரோட்டா மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு- ஆட்டோ டிரைவர் கைது

Published On 2018-06-04 11:38 GMT   |   Update On 2018-06-04 11:38 GMT
புரோட்டா மாஸ்டரை அரிவாளால் வெட்டியதாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). இவர், மதுரை காமராஜர் சாலையில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

நேற்று அவர் பணியில் இருந்தபோது மாரிநாதன், திலீப், காளிச்சரண், அரிகரசுதன் மற்றும் ஆட்டோ டிரைவர் வாசுதேவன் ஆகியோர் வந்தனர். அவர்கள் ஓட்டலில் வாக்குவாதம் செய்தனர். இதனை பாலமுருகன் தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பால முருகனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வாசுதேவனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News