ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய தம்பதி மீது வழக்கு
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டு போலீஸ் சரகத்திற்குட்பட்ட மூலக்கடை ஆளந்தனார் ரோடு பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது42). இவரது மனைவி அறிவுக்கொடி ( 40). பால்பாண்டிக்கும் அவரது அண்ணன் சேகரன் (45) என்பவருக்கும் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று சேகரன் தனது தோட்டத்திற்கு கூடுதலாக ½ மணி நேரம் தண்ணீர் பாய்ச்சி உள்ளார். இதனால் பால்பாண்டியும் அவரது மனைவியும் தட்டி கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சேகரன் மற்றும் அவரது மனைவி ராசி ஆகிய 2 பேரும் அறிவுக்கொடியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த அறிவுக்கொடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய சேகரன் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.