செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் மேலும் 26 குற்றவாளிகள் கைது

Published On 2018-08-06 09:51 GMT   |   Update On 2018-08-06 09:51 GMT
வேலூர் மாவட்டத்தில் மேலும் 26 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் முழுவதும் மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம், சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்து சட்ட விரோதமாக செயல்படும் கும்பலை பிடித்து ஜெயிலில் அடைக்க எஸ்.பி. பர்வேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த 3-ந்தேதி இரவு 10 மணி முதல் 4ந் தேதி காலை 6 மணிவரை மாவட்டம் முழுவதும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முடுக்கிவிடப்பட்டனர்.

அந்த ஒருநாள் இரவு நேர வேட்டையில் மட்டும் மணல் கடத்தியது, சாராயம் விற்றது மற்றும் காட்டன் சூதாட்டம் நடத்தியது ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 22 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அன்று ஒருநாள் மட்டும் மொத்தம் 28 வழக்குகள்பதிவு செய்யப்பட்டன. மேலும் 15 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, 2-வது நாளாக 4-ந் தேதி இரவு 10 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை போலீசார் மீண்டும் குற்றவாளிகளை பிடிக்க களமிறங்கினர்.

அதன்படி, 2-வது நாள் வேட்டையில் மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம் மற்றும் சாராயம் விற்ற மேலும் 26 குற்றவாளிகள் பிடிபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி வேட்டை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News