இந்தியா

பாகிஸ்தான் எனக் கூறிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி: கட்டுப்பாடு தேவை என உச்சநீதிமன்றம் கண்டிப்பு

Published On 2024-09-20 06:42 GMT   |   Update On 2024-09-20 06:42 GMT
  • முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என விசாரணையின் போது குறிப்பிட்டிருந்தார்.
  • பெண் வழக்கறிஞருக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்தை தெரிவித்திருந்தார்.

கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா, நில உரிமையளருக்கும்- குத்ததைதாரருக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பான வழக்கில பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்தார். இது மிகவும் சர்ச்சையானது.

அத்துடன் பெண் வழக்கறிஞருக்க எதிராக வெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு வழக்கில் அஜரான பெண் வழக்கறிஞரை பார்த்து, எதிர்க்கட்சி பற்றி வழக்கறிஞருக்கு நிறைய தெரியும் என்று தோன்றுகிறது. அதனால் அவர்களின் உள்ளாடைகளின் நிறத்தை அவளால் வெளிப்படுத்த முடியும் என வெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இது தொர்பாக விளக்கம் அளிகக் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Tags:    

Similar News