செய்திகள் (Tamil News)

புதுவையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் படுகாயம்

Published On 2018-08-10 10:15 GMT   |   Update On 2018-08-10 10:15 GMT
புதுவையில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் படுகாயம் அடைந்தார்.

புதுச்சேரி:

ஜெர்மன்நாட்டை சேர்ந்தவர் ஹெலாமரியாஸ் (வயது75). இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு புதுவைக்கு வந்து ஆசிரம விடுதியில் தங்கி அசிரமத்துக்கு சொந்தமான பள்ளியில் இசை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இன்று காலை பள்ளிக்கு செல்ல ஹெலாமரியாஸ் ஆசிரம விடுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பிரான்சுவா மர்த்தேன்வீதியில் வந்த போது இவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் தூக்கி வீசப்பட்ட ஹெலாமரியாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News