செய்திகள்

வடவள்ளி அருகே பெண் குழந்தை பிறந்ததால் இளம்பெண் தற்கொலை

Published On 2018-08-12 11:55 GMT   |   Update On 2018-08-12 11:55 GMT
வடவள்ளி அருகே 2-வதும் பெண் குழந்தை பிறந்ததால் மனவேதனை அடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை வடவள்ளி அருகே உள்ள சுல்தானியாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக். ஓர்க்ஷாப் தொழிலாளி. இவரது மனைவி வனிதா (வயது 23). இவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 3½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வனிதாவுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு 2-வதும் பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்து இருந்த நிலையில் பெண் குழந்தை பிறந்ததால் வனிதா மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட வனிதாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 5 வருடத்தில் வனிதா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News