செய்திகள் (Tamil News)

திருவள்ளூர் அருகே செங்கல்சூளை அதிபர் வெட்டி படுகொலை

Published On 2018-09-26 06:20 GMT   |   Update On 2018-09-26 07:45 GMT
திருவள்ளூர் அருகே வீட்டுக்குள் புகுந்து செங்கல் சூளை அதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செவ்வாப்பேட்டை:

திருவள்ளூரை அடுத்த மேல்மணம்மேடு முத்து நகரை சேர்ந்தவர் வெங்கட்டராமு (வயது 47). அதே பகுதியில் செங்கல்சூளை நடத்தி வந்தார்.

இன்று காலை அவர் செங்கல் சூளை செல்வதற்காக உறவினர் ஒருவரை காரை எடுத்துவர கூறியிருந்தார். அதில் செல்வதற்காக வீட்டின் முன்பு வெங்கட்ட ராமு நின்று கொண்டிருந்தார்.

அப்போது 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் வந்தனர். திடீரென அவர்கள் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த வெங்கட்டராமு மீது மோதினர்.

இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்தார். உடனே கார், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய 7 பேர் கும்பல், கத்தி-அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வெங்கட்டராமுவை சுற்றி வளைத்தனர்.

அதிர்ச்சி அடைந்த அவர் உயிர் தப்பிப்பதற்காக வீட்டுக்குள் ஓடினார். ஆனாலும் விரட்டி சென்ற கொலை கும்பல் படுக்கை அறைக்குள் புகுந்து வெங்கட்டராமுவை சரமாரியாக வெட்டினர்.

இதில் அவரது தலை முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. 2 கைகளின் விரல்களும் துண்டானது. அலறல் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் இருந்த வெங்கட்டராமுவின் மனைவி கிரேஸ், மகள் ஜனனி ஆகியோர் வெளியே வந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கணவர் உயிருக்கு போராடு வதை கண்டு கிரேஸ் கூச்சலிட்டார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தாங்கள் வந்த வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். உயிருக்கு போராடிய வெங்கட்டராமுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கட்டராமு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொலையுண்ட வெங்கட்ட ராமுவின் அண்ண னான முன்னாள் ஊராட்சி தலைவர் தங்கராஜ் கடந்த 2016-ம் ஆண்டு வெட்டிகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சிலருடன் வெங்கட்டராமுவுக்கு தகராறு இருந்தது. எனவே இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக தங்கராஜ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் விவரத்தை சேகரித்து வருகின்றனர். மேலும் தொழில் ரீதியாக வெங்கட்டராமுவுக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? என்பதையும் விசாரித்து வருகிறார்கள்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். வீட்டுக்குள் புகுந்து செங்கல் சூளை அதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News