செய்திகள் (Tamil News)
விதிமுறையை மீறி வாகனம் ஓட்டிய 293 பேர் மீது வழக்கு
பொன்னேரி பகுதியில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், செப்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் என விதிமுறையை மீறி வாகனம் ஓட்டிய 293 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொன்னேரி:
பொன்னேரி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிக வேகமாக செல்லுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், செப்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், நம்பர் பிளேட், லைசென்ஸ், ஹெல்மெட் இல்லாமல், விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள் பிடிபட்டனர். இது தொடர்பாக 293 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 30 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. #tamilnews
பொன்னேரி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிக வேகமாக செல்லுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், செப்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், நம்பர் பிளேட், லைசென்ஸ், ஹெல்மெட் இல்லாமல், விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள் பிடிபட்டனர். இது தொடர்பாக 293 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 30 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. #tamilnews