செய்திகள்

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையாது- திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2018-10-20 05:54 GMT   |   Update On 2018-10-20 06:59 GMT
தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #congress #dmk

சென்னை:

கமலின் மக்கள் நீதி மய்யம் -காங்கிரஸ் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்க இருப்பதாக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரசுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக கமலும் தெரிவித்தார்.

தற்போது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. எனவே தி.மு.க.வை கழட்டி விட்டு காங்கிரஸ் அப்படி ஒரு முடிவை எடுக்குமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

இதற்கிடையில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க கமல் முயற்சி செய்வதாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நடிகர் கமல் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்ததற்கு மகிழ்ச்சி.


காங்கிரஸ் கட்சியை ஆதரித்ததோடு கூட்டணிக்குள் வரவிரும்பும் கமலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் வாழ்த்து தெரிவித்து வரவேற்கிறேன். அவரின் நல்லெண்ணத்துக்கு பாராட்டுக்கள். இதனால் தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி உடையாது.

இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #congress #dmk

Tags:    

Similar News