செய்திகள் (Tamil News)

அசோக்நகரில் வாலிபரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர் கைது

Published On 2018-12-22 09:31 GMT   |   Update On 2018-12-22 09:31 GMT
சென்னை அசோக்நகரில் வாலிபரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
போரூர்:

புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இளவரசு. இவர் வேலை காரணமாக சென்னை வந்தார். அப்போது அசோக் நகர், சாலையில் உள்ள சிக்னல் அருகே உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்ற இளவரசு பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம வாலிபர் இளவரசுவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றான்.

இதுகுறித்து அசோக் நகர் போலீசில் இளவரசு புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சங்கர் கொள்ளைபோன செல்போன் ஐ.எம்.இ நம்பரை கொண்டு ஆய்வு செய்து அதை பயன்படுத்தி வந்த கண்ணம்மாபேட்டை கார்ப்பரே‌ஷன் காலனி 2-வது தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது19) என்பவரை கைது செய்தார்.

அவனிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திகேயன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News