செய்திகள் (Tamil News)

தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் ஓட்டல்கள், உணவகங்களில் வருமானவரி சோதனை

Published On 2019-01-03 07:21 GMT   |   Update On 2019-01-03 07:21 GMT
தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் ஓட்டல்கள் உணவகங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை காரணமாக ஓட்டல் ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர். #Incometaxraid

சென்னை:

தமிழகம் முழுவதும் பிரபல ஓட்டல்களில் இன்று வருமானவரி சோதனை நடைபெற்றது.

சைவ உணவுக்கு புகழ் பெற்ற சரவணபவன் ஓட்டல், அசைவ பிரியர்களை கவர்ந்துள்ள அஞ்சப்பர் மற்றும் கிராண்ட் சுவீட்ஸ் நிறுவன கடைகளில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த 3 நிறுவனங்களும் முறையாக வருமானவரி கட்டவில்லை என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் 32 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

சென்னையில் வடபழனி எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவீட்ஸ் நிறுவன கிளைகள் உள்ளன.

இங்கு இன்று காலையிலேயே புகுந்த வருமானவரித்துறை அதிகாரிகள் குழு ஓட்டல் விற்பனை விவரங்களையும், வரவு-செலவு கணக்குகளையும் ஆய்வு செய்தனர். இந்த சோதனை காரணமாக ஓட்டல் ஊழியர்கள் பீதி அடைந்தனர். #Incometaxraid 

Tags:    

Similar News