செய்திகள் (Tamil News)
ரெயிலில் அடிபட்டு அரசு ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 53). இவர் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றினார்.
மொரப்பூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி பலியானார்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.