செய்திகள்

முதுகுளத்தூர் அருகே பயனில்லா வேகத்தடையால் விபத்து - பஸ், டேங்கர் லாரி மோதல்

Published On 2019-04-30 14:18 GMT   |   Update On 2019-04-30 14:18 GMT
முதுகுளத்தூர் அருகே தேவையில்லாமல் அமைக்கப்பட்ட வேகத்தடையால், முன்னால் சென்ற தனியார் பஸ் மீது, டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
முதுகுளத்தூர்:

அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி, முதுகுளத்தூர் வழியாக கடலாடிக்கு நேற்று மதியம் தனியார் பஸ் வந்தது.

அப்போது அங்குள்ள வேகத்தடையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் சேதமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரி, பஸ் சேதமடைந்து நின்றதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பொதுவாக பள்ளி, பொதுமக்கள் அதிகம் கூடும் சாலைகளில் விபத்தை தடுப்பதற்காக வேகத்தடை அமைக்கப்படும். ஆனால் முதுகுளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வேகத்தடை தேவையற்றது. எனவே வேகத்தடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News