செய்திகள் (Tamil News)
ராயப்பேட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ராயப்பேட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பிளாட்பாரம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டியதில் மின்சாரம் தாக்கியது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பவுன்ராஜ் என்ற வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.
இதுபற்றி அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்தநிறுவனத்தின் மேற்பார்வையாளர் பாண்டியன் என்பவரை கைது செய்தனர்.