செய்திகள் (Tamil News)
கொரோனா வைரஸ்

சென்னையில் வேகமாக பரவும் கொரோனா - திரு.வி.க.நகரில் 395 பேருக்கு பாதிப்பு

Published On 2020-05-06 05:41 GMT   |   Update On 2020-05-06 05:41 GMT
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2008 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக திரு.வி.க.நகரில் 395 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வடசென்னை பகுதியான ராயபுரத்தில் 321 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 327 பேருக்கும், அண்ணாநகரில் 169 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 149 பேரும், தேனாம்பேட்டையில் 230 பேரும், திருவொற்றியூரில் 32 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 146 பேருக்கும், பெருங்குடியில் 15 பேருக்கும், அடையாறில் 53 பேருக்கும், அம்பத்தூரில் 98 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  ஆலந்தூரில் 11 பேருக்கும், மாதவரத்தில் 27 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 13 பேருக்கும், மணலியில் 13 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

Similar News