செய்திகள் (Tamil News)
மதுபானம் வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் ரசீது வழங்க வேண்டும்- உயர்நீதிமன்றம் நிபந்தனை
மதுபானம் வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் ரசீது வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 3 நாளைக்கு ஒருமுறை ஒருவருக்கு 1 பாட்டில் மட்டுமே மது விற்க வேண்டும். மது விற்பனையை நீதிமன்றம் கண்காணிக்கும், விதிமீறல் இருந்தால் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்படும்.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் ஒருவர் 2 மதுபாட்டில்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதியை டாஸ்மாக் எற்படுத்த வேண்டும். மதுபானம் வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் ரசீது தரப்பட வேண்டும்.
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கக் கோரிய வழக்கின் விசாரணை மே 14க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.