செய்திகள் (Tamil News)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அரக்கோணம் அரிகிலபாடியில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்

Published On 2020-05-13 09:27 GMT   |   Update On 2020-05-13 09:27 GMT
அரக்கோணம் அருகே அரிகிலபாடி கிராமத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா நடந்தது.
அரக்கோணம்:

அரக்கோணம் அருகே அரிகிலபாடி கிராமத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா நடந்தது.

விழாவிற்கு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார். ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன், அரக்கோணம் ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் கே.பி. பாண்டுரங்கன், தக்கோலம் பேரூராட்சி செயலாளர் பச்சையப்பன், காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் நெமிலி ஒன்றிய மாணவரணி செயலாளர் வக்கீல் பிரகதீஸ்வரன் வரவேற்றார். விழாவில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நரேஷ் நன்றி கூறினார்.

வேலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் முதலமைச்சரின் பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Similar News