செய்திகள் (Tamil News)
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா

Published On 2020-06-12 06:38 GMT   |   Update On 2020-06-12 06:38 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 9 பேர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 26 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 623 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. 75 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 510 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News