செய்திகள் (Tamil News)
வீட்டில் ஆப்பிள் போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் மாயம்
கரூர் அருகே வீட்டில் ஆப்பிள் போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவன் மாயமானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் கோதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராகுல் (வயது 20). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தன் தந்தையிடம் ஆப்பிள் போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் வேறு போனை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்த ராகுல், சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கரூர் டவுன் போலீசில் பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.