செய்திகள் (Tamil News)
கோப்புபடம்

4 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்

Published On 2020-10-19 08:35 GMT   |   Update On 2020-10-19 08:35 GMT
காரைக்குடி அருகே 4வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்கக்கோரி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி:

காரைக்குடி அருகே பாதரக்குடி கிராமத்தின் வழியாக செல்லும் மதுரை-காரைக்குடி 4 வழிச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், நாம் தமிழர் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

அப்போது கிராம மக்கள் கூறியதாவது:- தற்போது அமைக்கப்படும் 4 வழிச் சாலையால் இந்த பகுதியில் 25 வீடுகள் இடிக்கப்படும் நிலை உள்ளது. இதுதவிர கண்மாய்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. எனவே இந்த 4 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News