செய்திகள் (Tamil News)
எருமப்பட்டி அருகே பஸ் மோதி வாலிபர் பலி
எருமப்பட்டி அருகே பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
எருமப்பட்டி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் கமலாபுரம் அருகே கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் தினேஷ்குமார் (வயது 22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் எருமப்பட்டியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக பொன்னேரி பிரிவு சாலை நோக்கி சென்றுள்ளார்.
அப்போது எருமப்பட்டி புதிய பஸ் நிலையம் விநாயகர் கோவில் அருகே நாமக்கல்லில் இருந்து துறையூர் நோக்கி சென்ற அரசு பஸ்சும், இவரது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த தினேஷ்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.