செய்திகள் (Tamil News)
கோப்புபடம்

திருக்கழுக்குன்றத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு ‘சீல்'

Published On 2021-05-20 15:11 GMT   |   Update On 2021-05-20 15:11 GMT
காலை 6 மணி முதல் 10 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அரசு அனுமதித்துள்ளது.
கல்பாக்கம்:

கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில் திருக்கழுக்குன்றத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சில கடைகள் செயல்பட்டன. தகவலறிந்த வருவாய்துறையினர் அந்த கடைகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.

குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் 4 கடைகள் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 மளிகை கடைகள், பழக்கடை மற்றும் இரும்பு கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

Similar News