செய்திகள் (Tamil News)
கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக, சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
லேசான அறிகுறி, அறிகுறி இல்லாத நோயாளிகள் 3 நாட்களுக்கு பிறகு, 7 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்த பரிந்துரைக்கலாம்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியீட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
2 வகையான நோயாளிகளுக்கும் உடல் நிலையை பொறுத்து மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். லேசான அறிகுறி, அறிகுறி இல்லாத நோயாளிகள் 3 நாட்களுக்கு பிறகு, 7 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்த பரிந்துரைக்கலாம்.
மிதமான அறிகுறிகள் உள்ள நோயாளிகளை 10 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.