செய்திகள் (Tamil News)
திருட்டு

கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-06-20 11:33 GMT   |   Update On 2021-06-20 11:33 GMT
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் முஸ்டகிணத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 38). இவர் தனது மோட்டார் சைக்கிளை காந்தி கிராமத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து, பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News