செய்திகள் (Tamil News)
தென்சென்னை, திருவள்ளூர் மாவட்ட த.மா.க. நிர்வாகிகள் நியமனம்- ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ், தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவராக ஏ.எஸ்.முன்வர் பாட்சா, திருவள்ளூர் தெற்கு மாவட்டத் தலைவராக எஸ்.ஆர்.கே.மனோகரன் நியமிக்கப்படுகிறார்கள்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ், தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவராக ஏ.எஸ்.முன்வர் பாட்சா, திருவள்ளூர் தெற்கு மாவட்டத் தலைவராக எஸ்.ஆர்.கே.மனோகரன் நியமிக்கப்படுகிறார்கள்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவராக பதவி வகித்து வரும் தாம்பரம் இ.மணி, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வி.என்.வேணுகோபால் அம்மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.