செய்திகள் (Tamil News)
கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து- 5 பேர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசுக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீ விபத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.