செய்திகள் (Tamil News)
விபத்து பலி

லாலாபேட்டை அருகே கார் மோதி தொழிலாளி பலி

Published On 2021-10-30 11:08 GMT   |   Update On 2021-10-30 11:08 GMT
லாலாபேட்டை அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை:

லாலாபேட்டை அருகே உள்ள பொய்கை புத்தூரை சேர்ந்தவர் அழகிரி (வயது 60). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 27-ந்தேதி காவிரி ஆற்றில் குளித்து விட்டு அதிகாலை 4 மணிக்கு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது முசிறியில் இருந்து சரவணன் (47) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக அழகிரி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அழகி கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அழகிரி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News