செய்திகள் (Tamil News)
வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களால் பயணிகள் அச்சம்
தெரு நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக்கொண்டு இரு சக்கர வாகனத்தின் உள்ளே வந்து விழுகின்றன.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பஸ் நிலையம் முன்பு தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், பள்ளி மாணவ மாணவிகள், முதியோர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டி உள்ளது.
தெரு நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக்கொண்டு இருசக்கர வாகனத்தின் உள்ளே வந்து விழுகின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நாய்களை பிடிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.