செய்திகள் (Tamil News)
பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் கைது
பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் நதிக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர் மகேஷ்குமார் (வயது 44) என்பவரை கைது செய்து 3 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தார்.