செய்திகள்
ரெயில்

தீபாவளி சிறப்பு ரெயில்களில் ரூ.140 வரை கட்டணம் அதிகரிப்பு

Published On 2021-11-02 06:41 GMT   |   Update On 2021-11-02 07:58 GMT
தீபாவளி முடிந்து சென்னை திரும்ப வசதியாக 7-ந்தேதி திருநெல்வேலியில் இருந்து 06040 சிறப்பு ரெயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.
சென்னை:

தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே நெல்லை, நாகர்கோவிலுக்கு 3 சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

தீபாவளி சிறப்பு ரெயில்களில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வழக்கமாக ரூ.395 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் சிறப்பு ரெயிலில் ரூ.535 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.140 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் எடுக்க ரூ.15 சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்.

எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சூப்பர் பாஸ்ட் கட்டணம் ரூ.395. எக்ஸ்பிரஸ் கட்டணம் ரூ.365 ஆகும். ஆனால் தாம்பரம்-நெல்லை தீபாவளி சிறப்பு ரெயிலில் ரூ.495 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.130 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

அறிவிக்கப்பட்ட 3 சிறப்பு ரெயில்களிலும் சிறப்பு கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களிடம் கூடுதலாக ரெயில்வே துறை வசூலிக்கின்றது. அரசு பஸ்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட சற்று கூடுதலாக சிறப்பு ரெயில்களின் கட்டணம் உள்ளது.

சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒரு மணிநேரத்தில் 2 சிறப்பு ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன.



06037 எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு ரெயில் நாளை (3-ந்தேதி) இரவு 10.05 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயிலில் முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு ஏசி படுக்கை இடங்கள் மட்டுமே உள்ளன. 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்துள்ளது.

தீபாவளி முடிந்து சென்னை திரும்ப வசதியாக 7-ந்தேதி திருநெல்வேலியில் இருந்து 06040 சிறப்பு ரெயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

இந்த ரெயிலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பிய நிலையில் 3-ம் வகுப்பு ஏசி படுக்கைகள் 50 மட்டும் காலியாக உள்ளன. இந்த ரெயிலில் ஏசி 3-ம் வகுப்பு கட்டணம் ரூ.1340, 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.1905, 2-ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் இருக்கை கட்டணம் ரூ.245 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து 8-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செல்லும் சிறப்பு ரெயிலில் அனைத்து வகுப்புகளும் காலியாக உள்ளன.

Tags:    

Similar News