செய்திகள்
மல்லிகைப்பூ

தீபாவளியையொட்டி நெல்லையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

Published On 2021-11-03 07:28 GMT   |   Update On 2021-11-03 07:28 GMT
தீபாவளியை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று காலை மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.2,000 வரை விற்பனையானது.
நெல்லை:

தீபாவளியை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் பூக்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் இன்று அனைத்து பூ மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை சந்திப்பில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று காலை மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.2,000 வரை விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.1,500 வரை விற்பனையானது. ரோஜா பூ ரூ.250-க்கும், அரளிப்பூ ரூ.250-க்கும், சம்பங்கி பூ ரூ.120-க்கும் விற்பனையானது.

இதுபோல சங்கரன்கோவில், ஆலங்குளம் பூ மார்க்கெட்டிலும் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது.

Tags:    

Similar News