செய்திகள் (Tamil News)
கோப்புபடம்

வெள்ளகோவிலில் ரூ.34 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

Published On 2021-11-03 09:07 GMT   |   Update On 2021-11-03 09:07 GMT
ஒரு கிலோ தேங்காய் பருப்பை அதிகபட்சமாக ரூ.103.45க்கும், குறைந்தபட்சம் ரூ.76.40க்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் தேங்காய் பருப்பு, சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 

இதில் 99 விவசாயிகள் கலந்து கொண்டு 40ஆயிரத்து 174 கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியை சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பை அதிகபட்சமாக ரூ.103.45க்கும், குறைந்தபட்சம் ரூ.76.40க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.34 லட்சத்து 22 ஆயிரத்து 847க்கு வணிகம் நடைபெற்றது.
Tags:    

Similar News