செய்திகள் (Tamil News)
வெள்ளகோவிலில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன்-தேடும் பணி தீவிரம்
வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் ஆற்று வெள்ளத்தில் தரணிஷ் அடித்து செல்லப்பட்டார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் எல்.கே.சி நகர் பகுதியை சேர்ந் தவர் தரணிஷ் (வயது19). இவர் தாராபுரத்தில் ஐ.டி.ஐ. படித்து வருகிறார். தரணிஷ் இவரது நண்பர்கள் வெங்கடேஷ், சுரேந்தர், ஆபிரகாம் ஆகிய 4 பேரும் வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பை அணைக்கட்டு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றிற்கு குளிக்கச் சென்றனர்.
அப்போது வெள்ள ப்பெருக்கு அதிகமாக இருந்ததால் ஆற்று வெள்ளத்தில் தரணிஷ் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து நண்பர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு வரை தேடி கண்டுபிடிக்க முடியாததால் மீண்டும் இன்று காலை முதல் தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.