செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் கபடி விளையாட்டு வீரர்கள் தேர்வு-9ந் தேதி நடக்கிறது

Published On 2021-11-06 08:21 GMT   |   Update On 2021-11-06 08:21 GMT
தமிழக அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. இதில் 1.1.2003-க்கு பின்னர் பிறந்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழக செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தின் சார்பில் வருகிற 9-ந் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் கெலோ இண்டியா தமிழக அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. இதில் 1.1.2003-க்கு பின்னர் பிறந்தவர்கள் கலந்துகொள்ளலாம்.

இவர்கள் ஆண்கள் 70 கிலோவும், பெண்கள் 65 கிலோவும் இருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் வீரர், வீராங்கனைகள் ஆதார் அட்டை, பள்ளி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் நகல் கண்டிப்பாக கொண்டுவரவேண்டும், மேலும் ஷூ கொண்டுவர வேண்டும்.

இதில் தேர்ந்தெடுக்கப் படும் வீரர், வீராங்கனைகள் வருகிற 14-ந் தேதி சென்னையில் மாநில கபடிக்கழகம் நடத்தும் தேர்வுக்குமாவட்ட கபடிக்கழகத்தின் சார்பில் அழைத்துச் செல்லப் படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News