செய்திகள் (Tamil News)
தாசவநாயக்கன்பட்டி டாஸ்மாக் மதுபான கடை அருகே வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி டாஸ்மாக் மதுபான கடை வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போதுஅங்கு சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்துவிசாரித்தனர்.
விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம், திருநகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பதும் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.