செய்திகள் (Tamil News)
பூசாரிகளுக்கு ஆலய வழிபாட்டு முறை பயிற்சி
முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மடத்துக்குளம்:
திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூரில் தமிழ்நாடு பூசாரிகள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு 3 நாள் ஆகம பூஜை ஆலய வழிபாட்டு முறை பயிற்சி முகாம் நடந்தது.
விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இரா. ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் மாநில அர்ச்சகர் நலச் சங்கத் துணைத் தலைவர் உடுமலை கஜேந்திரன், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க . பொறுப்பாளரும், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவருமான கே.ஈஸ்வரசாமி மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், அர்ச்சகர்கள், பூசாரிகள் கலந்து கொண்டனர்.