உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி முகாம்

Published On 2021-12-01 07:12 GMT   |   Update On 2021-12-01 07:12 GMT
பான்ச ஜன்யா பன்முக திறன் வளர்ச்சி மையத்தின் நிறுவனர் பாரதி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்வுகளை செயல்படுத்தினார்.
திருப்பூர்:

அரசு பள்ளி மாணவர்களின் பன்முக திறமையை வெளிக்கொணரும் விதத்தில் ஒரு நாள் பயிற்சி முகாம் திருப்பூர் கருப்பகவுண்டன்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் சிவகாமி செய்திருந்தார். இதில் பான்ச ஜன்யா பன்முக திறன் வளர்ச்சி மையத்தின் நிறுவனர் பாரதி மாணவர்களின் திறமைகளை  வெளிக்கொணரும் நிகழ்வுகளை செயல்படுத்தினார்.

நிகழ்ச்சியில் திருப்பூர் ரோட்டரி சங்க செயலாளர் சண்முகசுந்தரம், உதவி ஆளுனர் நாகராஜ், ரோட்டரி சங்க  உறுப்பினர் டாக்டர் கே.சிவசாமி, பள்ளி பொறுப்பாளர் கணேஷ்குமார், உடற்கல்வி  ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்  பள்ளி மாணவர்கள் 73 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.
Tags:    

Similar News