உள்ளூர் செய்திகள்
கைது

ஜோலார்பேட்டை அருகே முதியவருக்கு பிளேடு வெட்டு - வாலிபர் கைது

Published On 2021-12-01 14:30 GMT   |   Update On 2021-12-01 14:30 GMT
ஜோலார்பேட்டை அருகே பெண்ணை தாக்கிய முதியவரை பிளேடு வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த குடியானகுப்பம் தொம்பசிமேடு ராமர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜி (வயது 60). இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மணி என்பவருடைய மனைவி விஜயலட்சுமியை தாக்கி உள்ளார். இது குறித்து தகவலறிந்த விஜயலட்சுமியின் மகன் மோகன் குமார் (26) கோவிந்தராஜ் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் பிளேடால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும் இது குறித்து கோவிந்தராஜி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோகன் குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News