உள்ளூர் செய்திகள்
.

ஓமலூர் அருகே ஆடு திருடிய 4 பேர் கைது

Published On 2022-01-27 08:20 GMT   |   Update On 2022-01-27 08:20 GMT
ஓமலூர் அருகே ஆடு திருடியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த குமார். இவருடைய மகன்கள் ஹரிஷ் (24), தினேஷ்(23). அதே பகுதியில் உள்ள ஆண்டி தெரு பகுதி சேர்ந்த ராஜா என்பவருடைய மகன் அரவிந்த் (19). அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சதீஷ் (25). இவர்கள் 4 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு காடையாம்பட்டியை  சேர்ந்த ஜோசப் என்பவரின் ஆட்டை இரவில் திருடியதாக புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் காடையாம்பட்டி  போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் 4 பேரும் சேர்ந்து ஆட்டை திருடியது. தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News