உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2022-02-16 09:34 GMT   |   Update On 2022-02-16 09:34 GMT
மாணவியின் பெற்றோர்கள் அவிநாசிபாளையம் போலீசில் புகார் அளித்தனர்.
பல்லடம்:

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் தொங்குட்டிபாளையம் ஊராட்சியை சேர்ந்த டி.ஆண்டிபாளையம் பகுதியில் வசிக்கும் 12 ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் அவிநாசிபாளையம் போலீசில் புகார் அளித்தனர். 

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பர்கூரைச் சேர்ந்த முருகன் மகன் தனபால்(23) என்பவருடன் இருப்பதை கண்டுபிடித்தனர். 

பின்னர் அவர்களை அவிநாசிபாளையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மாணவியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு பல்லடம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது .

தனபாலிடம் விசாரணை நடத்திய மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி தலைமையிலான போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News