உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

செயின் பறித்த திருடனை துரத்தி பிடித்த முதியவர்

Published On 2022-02-16 10:09 GMT   |   Update On 2022-02-16 10:09 GMT
செயின் பறித்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி :

திருச்சி  சத்திரம்  பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 60). இவரது மனைவி ஹேமாவதி (53). இவர்கள் இருவரும்    சம்பவத்தன்று கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையில்  உள்ள  தங்களுடைய உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு இரவு 10 மணியளவில் மீண்டும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கினர்.
 
அப்போது இந்த தம்பதியினர் நடந்து சென்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று ஹேமாவதி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். அப்போது ஹேமாவதி கூச்சல் போட்டதும், உடன் இருந்த கணவர் கணேசன் அந்த மர்ம நபரை துரத்தி சென்று மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தார். 

பின்னர்  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் திருச்சி கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் ஹேமாவதியிடம் செயின்பறித்த நபர்  ராம்ஜி நகர் பகுதியைச்சேர்ந்தவர் யுவராஜ் (35) என்பது தெரியவந்தது. பின்னர். இது குறித்து ஹேமாவதி கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதனால் திருச்சி  சத்திரம்  பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News