உள்ளூர் செய்திகள்
நகைபறிப்பு

தனியாக நடந்துசென்ற பெண்களிடம் நகைபறிப்பு

Published On 2022-02-16 10:37 GMT   |   Update On 2022-02-16 10:37 GMT
மதுரையில் தனியாக நடந்துசென்ற 2பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது. நகைபறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கையும் களவுமாக சிக்கினார்.
மதுரை

மதுரை எஸ்.எஸ்.காலனி சொக்கலிங்கம் நகரை சேர்ந்தவர் சங்கர் மகள் பிரியதர்சினி (வயது23). இவர் நேற்று சக்திவேல் அம்மாள் தெருவில் நடந்துசென்றார். அப்போது அங்குவந்த மர்மநபர் பிரியதர்ஷினி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றார். 

உடனே பிரியதர்சினி கூக்குரல் எழுப்பினார். அந்த பகுதி மக்கள் துரத்திச்சென்று அந்த வாலிபரை பிடித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை  நடத்தினர். 

இதில் அவர் முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த கதிரவன்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மதுரை கூடல்புதூர் பொதிகைநகர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த சர்தார் மகள் சூரியவர்ஷினி (21). 

இவர் நேற்று அஞ்சல்நகர் பகுதியில் நடந்துசென்றார்.  அப்போது யாரோ மர்மநபர் சூரியவர்ஷினி அணிந்திருந்த பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். 

இதுகுறித்து  சூரியவர்ஷினி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News