உள்ளூர் செய்திகள்
மணல் கடத்தல்

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள் பறிமுதல்

Published On 2022-02-16 10:40 GMT   |   Update On 2022-02-16 10:40 GMT
மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட உதவி புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் நாகராஜன் மற்றும் சுரங்கத் துறை அலுவலர்கள் நேற்று திருவள்ளூரை அடுத்த கோட்டையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருட்டுத்தனமாக மணல் எடுத்து வந்த 2 லாரிகளை அவர்கள் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் அந்த லாரியில் இருந்த நபர்கள் வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து உதவி புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் நாகராஜன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குபதிவு செய்து 2 லாரிகளை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்கள் யார்? என விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News