உள்ளூர் செய்திகள்
சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்த முதியவரை படத்தில் காணலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக பயன்படுத்தப்பட்ட சக்கர நாற்காலி

Published On 2022-02-19 08:31 GMT   |   Update On 2022-02-19 08:31 GMT
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வசதியாக சக்கர நாற்காலிகள் வாக்கு சாவடிகளில் பயன்படுத்தப்பட்டது.
நாகர்கோவில்:

வாக்குச்சாவடிகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புத்தளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த மூதாட்டி ஒருவரை வாக்குச்சாவடிகளுக்குள் சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்றனர்.

இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலும் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்று உறவினர்கள் வாக்களிக்க வந்தனர்.
Tags:    

Similar News