உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய முன்னாள் அரசு ஊழியர்

Published On 2022-02-19 08:39 GMT   |   Update On 2022-02-19 08:39 GMT
வாக்கு சாவடியில் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் அரசு ஊழியர் குடும்பத்துடன் திரும்பி சென்றார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி 23-வது வார்டுக்கான வாக்குப்பதிவு மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. இங்கு வாக்களிக்க ஓய்வு பெற்ற முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் தனது மனைவி, மகனுடன் வந்திருந்தார்.

அப்போது வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வாக்களிக்க முடியாமல் குடும்பத்துடன் ஏமாற்றத்துடன் திரும்பினார். 

முன்னாள் அரசு ஊழியரின் மகன் பெங்களூருவில் இருந்து தனது வாக்கை பதிவு செய்வதற்காகவே ஊருக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News