உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆம்பூர் அருகே பைக் மீது கார் மோதி பிரியாணி மாஸ்டர் பலி

Published On 2022-02-19 08:54 GMT   |   Update On 2022-02-19 08:54 GMT
ஆம்பூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பிரியாணி மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.
ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த சோலூர் ராஜீவ் காந்தி பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் அகமது (வயது 46). இவர் ஆம்பூர் பகுதியில் தனியார் ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.
பயாஸ் அகமது நேற்று நள்ளிரவு ஓட்டலில் வேலைகளை முடித்துவிட்டு ஆம்பூர் வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். 

பெங்களூ ரிலிருந்து சென்னைக்கு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பயாஸ் அகமது ஆம்பூர் சாலையை கடக்க முயன்ற போது கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பயாஸ் அகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விரைந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் அவரது உடலை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News