உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மணவாளக்குறிச்சி அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

Published On 2022-02-19 09:49 GMT   |   Update On 2022-02-19 09:49 GMT
மணவாளக்குறிச்சி அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி:

மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் கல்லடிவிளை சிவந்தமண் என்ற இடத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 47). தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவருடைய மனைவி மஞ்சு. 

கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று சுந்தர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவை தட்டினார். ஆனால் மஞ்சு கதவை திறக்கவில்லை. 

இதனால் மனம் உடைந்த சுந்தர் குடிபோதையில்  உட லில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். 

பின்னர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அவரை கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார். 

இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் மஞ்சு புகார் செய்தார். மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News