உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-02-19 09:50 GMT   |   Update On 2022-02-19 09:50 GMT
மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:

மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம் அடுத்த பெரியூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34).கூலி தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து  வந்தார். 

இந்த நிலையில் சம்பவத் தன்றும் குடித்து விட்டு வந்த சுரேஷ் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். ஏன் இப்படி அடிக்கடி குடித்து விட்டு வருகிறீர்கள்? என மனைவி கண்டித்தார். 

இந்தநிலையில் அன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது சுரேஷ் விஷம் குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். 

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அவரை பரி சோதனை செய்த  டாக்டர்கள் வரும் வழியிலேயே சுரேஷ் இறந்து  விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News