உள்ளூர் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி வாக

275 பதவிகளுக்கு தேர்தல்

Published On 2022-02-19 10:23 GMT   |   Update On 2022-02-19 10:23 GMT
சிவகங்கை மாவட்டத்தில் 275 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது
காரைக்குடி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இங்குள்ள 285 கவுன்சிலர் பதவிகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றதாலும், கானாடு காத்தான் பேரூராட்சி 1-வது வார்டில் யாரும் போட்டியிடாததாலும் 275 வார்டுகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. ஆயிரத்து 185 பேர் போட்டியிட்டனர் இதற்காக 420 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டிருந்தன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளம், சக்கர நாற்காலி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன. 

இதுதவிர வாக்குச் சாவடி களில் குடிநீர் வசதி கழிப்பறை வசதி தடையில்லா மின்சார வசதி போன்றவையும் செய்யப் பட்டிருந்தன. பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு காமிரா மூலம் வாக்குப்பதிவு, பதிவு செய் யப்பட்டது.
Tags:    

Similar News