உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-02-19 11:19 GMT   |   Update On 2022-02-19 11:19 GMT
2-வது மனைவி பிரிந்து சென்றதால் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள சாத்தான்குளத்தை சேர்ந்த பெருமாள் மகன் வேல்முருகன் (வயது40). அதே ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 

அவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், உறவுக்கார பெண்ணை 2&ம் திருமணம் செய்தார்.

இந்த நிலையில், குடும்பப்பிரச்சினை காரணமாக 2-வது மனைவியும் பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக  மனவேதனையில் இருந்த வேல்முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 கேணிக்கரை போலீசார், சடலத்தை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News